states

img

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது!

திருப்பதி மலைப்பாதையில், சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினரால் வைக்கப்பட்டிருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. 
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது. இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் மீண்டும் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து, அதே பகுதிக்கு அருகே வைத்திருந்த சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. தற்போது, அந்த கூண்டில் மற்றொரு சிறுத்தையும் சிக்கியுள்ளது. 
கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகளை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்துப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.